தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/02/2011

நண்பர்களின் உதவி ....


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!
         நான் உங்களிடம் கேட்கப் போவது பண உதவியோ, பொருளுதவியோ அல்ல. முற்றிலும் சமூகத்திற்கான உதவி. நான் சமூகத்தில்  நடந்த அநீதி குறித்து எழுத உள்ளேன்.  அதை நான் ஆரம்பத்ததின் நோக்கம் விளம்பரமோ ,
பிரபலமடையவோ அல்ல. சமூகத்தில் நடக்கும் அநீதிகள் அனைத்து மக்களுக்கும் புரிய வைக்கப் பட வேண்டும் என்பதற்காக மட்டுமே.
  சென்ற வருடம் எவ்வளவு ஊழல்,எத்தனை பேர் பலி,கடத்தல்  என்றால் யோசித்துப் பாருங்கள். இதை போன்ற சமூக பிரச்சினைகளை  பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதைத் தவறவிடுவதில் எனக்குத் துளியும் விருப்பமில்லை.
        அதற்கான முயற்சியாய் இந்த ஒருவனின் குரல் என்ற  ஒரு புதிய வலைப்பூவை எனது  குரலாய் ஆரம்பித்து வைக்கிறேன். இங்கு தினமும் சமூகம் அதன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து தினம் ஒரு பதிவாய் அவர்கள் விருப்பப்படி வெளியிடலாம்.
         இந்த வலைப்பூவின் நோக்கம் நம்  சமுகம் போன்ற பிரச்சினைகள் குறித்து 
நம்மவர்கள்   மற்றும் வாசகர்கள் கலந்துரையாடி ஒரு புரிதலை ஏற்படுத்தி பொது மக்களிடைய  கொண்டு செல்ல வேண்டும் என்பதே. இங்கு சமூக பிரச்சினைக் குறித்து நண்பர்கள்  யார் வேண்டுமானாலும் பதிவுகளை எழுதலாம். நண்பர்கள் செய்ய வேண்டியதெல்லாம்

* உங்களுக்கு இந்த பிரச்சினை குறித்து குரல் கொடுக்கும் எண்ணம் இருந்தால் oruvaninkural@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு உங்களின் கீழ்காணும் விபரங்களை அனுப்பி வையுங்கள்.
பெயர், தொடர்பு எண்(விருப்பமிருந்தால்), மின்னஞ்சல், வலைப்பூ முகவரி -(இவை எதுவும் வெளியிடப்படா)

* நீங்கள் உங்கள் சமுகத்தைப் பற்றி எழுதுங்கள். அதை oruvaninkural@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். அது உங்கள் பெயருடன் (அ) புனைப்பெயரில் இந்த தளத்தில் வெளியிடப் படும். உங்களுக்கு விருப்பமிருப்பின் அந்தப் பதிவை உங்கள் வலைப்பூவிலும் வெளியிட்டு இணைப்பு கொடுத்தால் உங்கள் நலன் விரும்பிகளிடம் கொண்டு சேர்க்க ஏதுவாக இருக்கும்.

* நீங்கள் முன்னரே சமூகம்  குறித்து எழுதியிருந்தாலும் அதை அனுப்பி வைக்கலாம். அதை இங்கு வெளியிட்டு அனைவர்க்கும் பயன்பட செய்யுங்கள்.

இந்த சமூகத்தில் நாம் ஒருங்கிணைந்து செயல் படுவோம். நாம் சினிமா, முரளிதரனின் 800 விக்கெட்டுகள் பற்றியெல்லாம் பதிவெழுதுகிறோம், அவைகளுக்கு வாக்களித்து ஆதரவு தெரிவிக்கிறோம். இது நமக்கான இடம். இங்கு நம் ஆதரவை ஒருமித்து வெளிப்படுத்துவோம்.

       நாம் அடிமையாகிக் கொண்டிருப்பதை அனைவருக்கும் புரிய வைப்போம்.
                  நம்மால் ஒரு சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
                                    என்பதையும் எடுத்துரைப்போம் ..

சமூகம் குறித்த வலைப்பூ 

கருத்துகள் இல்லை: