தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/31/2011

உயிரை எடுக்கும் போலி ஓட்டுனர்கள்

            
   உயிரை பறிக்கும் எமதர்மன் கையில் பாசக்கயிற்றுடன் எருமை மாட்டின் மீது வருவதாக கூறுவது உண்மையோ இல்லையோ, போலி ஓட்டுனர் உரிமங்களுடன் தமிழக சாலைகளில் 'டிரைவர்கள்' ரூபத்தில் எமன்கள் பவனி வருவது சர்வ நிச்சயமாக இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது புள்ளிவிவரம்

பொதுவாகவே ஓட்டுனர் உரிமங்கள் பெற விரும்புவர்களில்,90 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் அதற்கென உள்ள தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மற்றும் ஏஜென்சி மூலமாகத்தான் பெறுகிறார்கள்.


ஓரளவு ஓட்டக்கற்றுக்கொண்டவர்கள் போக்குவரத்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று அதற்கென உள்ள தேர்வில் கலந்துகொண்டு உரிமங்களை பெறுகிறார்கள்.


ஆனால் இப்படி உரிமங்களை பெறுபவர்கள் அனைவருமே, அவர்கள் எந்த வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் கோரி பெற்றார்களோ, அதனை ஓட்டுவதற்குரிய முழு தகுதியையும் பெற்றுள்ளார்களா? என்றால் இல்லை என்றே கூறவேண்டும்.


பணம் அல்லது செல்வாக்கை பயன்படுத்தி ஏஜெண்டுகள் மூலம் பெற்றுவிடுகிறார்கள். இதில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் என்றால் அதிகாரிகளே அவர்களுக்கு வீட்டிற்க்கே வந்துகூட உரிமங்களை வழங்கி விடுகிறார்கள்.

இப்படி வாங்கப்படும் உரிமங்களை வைத்துக்கொண்டு சாலைகளில் வாகனங்களை ஓட்டினால் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

இது ஒருபுறம் இருக்க,தமிழகம் முழுவதும் லாரி,பேருந்து போன்ற கனரக வாகனங்களை பெற்றவர்களில் கால்வாசி பேர், அதாவது நான்கில் ஒரு பங்கினர், வாகனங்களை ஓட்டுவதற்குரிய முழு தகுதிகள் இல்லாதவர்களாகவும், போலி ஓட்டுனர் உரிமங்களுடனேயே இவர்கள் சாலைகளில் வலம் வருவதாகவும் மாநில அரசின் சாலை போக்குவரத்து பயிற்சி நிறுவனம்,ஆங்காங்கே நடத்திய திடீர் சோதனைகளில் தெரியவந்துள்ளது....

கருத்துகள் இல்லை: