தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/30/2011

மகாத்மா நினைவஞ்சலி....




தந்தையா, தாத்தாவா, அண்ணலா, மகாத்மாவா?



தனிமனிதச் சுதந்திரத்தின் மகானே ?


அத்தனையும் ஒன்றான அற்புத மனிதரே


அகிம்சையே காட்டிய அறிஞரே


மொத்த உலகத்தின் முதன்மைச் சிந்தனையே


முயற்சிக்கே பணிந்த முழுமையின் எளிமையே.


இத்தனை பெருமையும் இணைந்த இமயமே


தேசத் தந்தையாம் 'காந்தி' மகாத்மா!


சத்தியமே சோதித்த சோதனைச் சத்தியம


சமத்துவம் நடத்திய சமதர்ம உத்தமம


கத்தியும் ரத்தமும் காணாத போர்க்களம


கருணையும் உரிமையும் வற்றாத நடுநிலைக்களம


பித்தர்களும் போற்றிடும் அறிவியல் நிறைகுடம


பெண்மையைப் போற்றிடும் அன்பின் உறைவிடம


சுத்தமும் சுகமும் அகமும் புறமுமாம்


சுதந்திரம் என்பதே பிறரையே மதிப்பதாம்


எத்தனை புகழிலும் நழுவாத ஒழுக்கமாம


எண்ணம் அனைத்திலும் நேர்வழியாம்


புத்தனைப் போலவே வாழ்ந்ததும் உதாரணம


புரிந்துகொள்ள ஏதுவாய் மனித உலகம்


இத்தனை பெருமையும் இணைந்த இமயம


தேசத் தந்தையாம் 'காந்தி' மகாத்மா!


உண்ணலில் உத்தமராய் ; ஊட்டலில் அகிம்சையாம


உலகமதம் அனைத்தையும் ஒன்றுகண்ட ஞானியாம




அகிலத்திற்கே அருமைப் புதல்வனை; அண்ணல்காந்தியை


            அன்னைபாரதம் இழந்த கொடுரமான நாள்.....

 இன்று : காந்தி நினைவு தினம் ....

கருத்துகள் இல்லை: