தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/18/2010

என் அனுபவம் - பணம் எங்கே ?


அன்பை சொல்கிறேன் என்று
அழகானவள் ஒருத்தி வந்தாள்
பாக்கெட்டில் பணவீக்கம் என்றதும்
மனதால் அவள் நொந்தாள்

பணம் பார்க்கும் மனங்கள்
மனம் பார்க்க விரும்புவதில்லை
கல்லாகி போன மனங்கள்
கரைந்தாலும் கரைவதில்லை

உறவை சொல்வோர் எல்லாம்
நிறைவை தருவதில்லை
ஈரம் இருந்தால் மட்டுமே
இரங்குகிறது இதயங்கள் கூட

பரிவு என வருவதெல்லாம்
பணத்தை தான் தேடுகிறது
உறவென வருவதெல்லாம்
ஊட்டத்தை மட்டுமே நாடுகிறது

காசில்லா கோலத்திற்கு
கடவுள் கூட இரங்குவதில்லை
கடனாளியாகிவிட்டால்
கட்டிலில் கூட இடமில்லை

உடன் பிறந்தேன் என்பவர் எல்லாம்
நாம் உருக்குலைந்தால
உடன் இருப்பதில்லை
பத்து மாதம் சுமந்த உறவும்
படுக்கைக்கு துணை வந்தால்
நம்மை நினைப்பதில்லை

காசு பார்க்கும் கலிகாலமடா
இதில் காண்பதெல்லாம் பொய் வேஷமடா....

கருத்துகள் இல்லை: