தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/22/2010

தனித்துவமானவரா ரஜினி ?

            நண்பர் ஒருவர் "உங்களுக்கு ஏன் இவரைப்பற்றி கவலை ? " என்ற பதிவிலிட்ட பின்னூட்டலுக்கான பதிலை ஒரு பதிவாக எழுதுகிறேன். பலரும் ரஜினியை விமர்சிப்பதற்கு கையிலெடுக்கும் இன்னுமொரு விடயம் இதுவென்பதால் ஒரு ரஜினி விசுவாசியாக எனது விளக்கம்.
இதுதான் அவரது பின்னூட்டல்.
//Rajini should stop acting on public meeting(should not be like others).., It is accustomed to cinema fraternity to praise the politician when they are on power,for instance when Jaya was CM Rajini called her 'Thairia lakshmi' now he is in all praise for Karuna. All you Rajini fans should understand this. Only then rajini will be unique from others.//

நண்பர் அவர்களே.....
          கலைஞர் இருந்த மேடையில் வைத்து விஜயகாந்தின் வெற்றியை பாராட்டிய ரஜினியை, எல்லோருமே ஜெயலலிதாவுக்கு பயந்து வாயை பொத்திக்கொண்டிருந்த நேரம் அவரது அமைச்சர்கள் முன்னிலையிலேயே ஜெயலிதாவின் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ரஜினியை உங்களுக்கு தெரியாதா? 2004 ஆம் ஆண்டு எனது ஒட்டு அ.தி.மு.க விற்கு என ரஜினி கூறியதுகூட ராமதாசின் ரசிகர்கள் மீதான தாக்குதலின் எதிரொலிதான், அப்போதுகூட ரஜினி கலைஞரை விமர்சித்ததில்லை. ஜெயலிதாவை 'தைரியலக்ஸ்மி' என பாராட்டியது வீரப்பனை கொன்றதற்காக மட்டும்தான். அங்கு ஜெயலிதாவின் ஆட்சித்திறனை அவர் ஒரு தடவைகூட பாராட்டவில்லை. இதுவரை சினிமாவிலுமிருந்து வந்த எந்த முதல்வர்களும் செய்யாத துணைநடிகர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை இப்போது கலைஞர் ஆரம்பித்துள்ளதற்குரஜினி பாராட்டியதில் என்ன தவறு?ஒருவர் ஏதாவது தப்பு பண்ணும் போது திட்டினா, அப்புறமா அவர் என்னதான் நல்லது பண்ணாலும் திட்டிக்கிட்டே இருக்கணும் என்பது எந்த ஊரு நியாயம் சார். இதுவும் ரஜினியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு தகுதியே அன்றி குறையில்லைக் கண்ணா .
                வீடு வழங்கும் திட்டத்தை கலைஞர் அறிவித்தபோதுகூட அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இல்லாமல் சரியானவர்களுக்குத்தான் வீடு போய் சேரவேண்டும் என்பதை 'தாத்தா பேரன்' கதைமூலம் முகத்துக்கு முன்னாலேயே கூறியவர் ரஜினி. கலைஞரின் பாராட்டுவிழாவில் அஜித்தின் பேச்சுக்கு கலைஞரின் அருகிலிருந்தே எழுந்து கைதட்டியவர் ரஜினி. தன் குடும்பத்தின் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு பாதுகாப்பாகஇருக்கவேண்டும் என்பதால்தான் கலைஞர் ரஜினியை எப்போதும் தன பக்கத்தில் வைத்திருக்க விரும்புகிறார் . இதனால்தான் தான் சம்பந்தப்பட்ட எல்லா விழாக்களுக்கும் ரஜினியை அழைக்கிறார். போனவிடத்தில் திட்டிவிட்டா வரமுடியும்? எதிரியை கூட வையாத ரஜினி நண்பன் என்னும் பேரை சொல்லிக்கொண்டு திரிபவரை வைவாரா?
         தன்னைத்தவிர ரஜினி தன்கூட இருக்கும் அனைவரையுமே புகழ்ந்துதான் பேசுவது வழமை , இது நடிப்பல்ல நண்பரே நல்ல பண்பு. எதற்க்காக ரஜினி தன்னைதாழ்த்தி கமலை புகழவேண்டும்? சரி ரஜினி திட்டமிட்டு செய்கிறார் என்றே வைத்துக்கொள்வோம், ஏன் மற்ற யாருமே இதை செய்வதில்லை? காரணம் ஈகோ, ரஜினியிடம்அது இல்லை என்பதால்தான் நண்பர் 'கவிதைகாதலன்' குறிப்பிட்ட மாதிரி "நிச்சயம் ரஜினி என்ற ஒற்றை மனிதனைத்தவிர வேறு யாராலும் இந்த 150 கோடி ரூபாயை தோளில் தூக்கி சுமக்க முடியாது... ஆனால் அந்த மனிதனோ தனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எல்லாம் ஷங்கர், ரஹ்மான், ஐஸ்வர்யா என்கிறார்." என வியந்து பார்க்க முடிகிறது.
            ரஜினி அ.தி.மு,க விற்கு ஆதரவு தெரிவித்தது (ஒரு தடவை ) தவறென்றால் காங்கிரசும், பி.ஜே.பி யும் மாறிமாறி தி.மு.க வுடனும் அ.தி.மு.க வுடனும் கூட்டணி அமைப்பதை என்னவென்று சொல்வது?
         தி.க வுக்கு ஓட்டுப்போட சொன்ன அண்ணா மற்றும் கலைஞர் பின்னர் தி.கவிற்கு போட வேண்டாம் தி.மு.கா விற்கு ஓட்டுப்போடுங்கள் என்றனர்.
         தி.மு.க விற்கு குறிப்பாக கலைஞருக்கு ஒட்டு கேட்ட எம்.ஜி.ஆர் பின்னர் தி.மு.க ஊழல் கட்சி அ.தி.மு.க விற்கு வாக்கு போடுங்கள் என்றார்.
        அண்ணா, எம். ஜி ஆர் இருவருமே தமது தாய் கட்சிகளைவிடுத்து 'தனியாக கட்சி தொடக்கிய' பின்னர்தான் தாய் கழகங்களுக்கு ஓட்டுப்பட வேண்டாம் தங்களுக்கு ஓட்டுப்போடுங்கள் என்றனர், அங்கு சொந்த கட்சி என்ற சுயநலம் இருந்தது. ஆனால் ரஜினி அ.தி.மு.கவிற்கு ஓட்டுப்போட சொல்லியபோது ரஜினி என்ன அ.தி.மு.க தலைவரா? இல்லை உறுப்பினரா? ரஜினி அ.தி.மு.க வை ஆதரித்தது ராமதாசுடன் கலைஞர் வைத்த கூட்டணிக்காக, ரசிகர்களைத்தாக்கிய ராமதாசுக்காக.
          ரஜினி எப்போதுமே ஏனையவர்களிடமிருந்து வித்தியாசப்பட்டவர்தான், இல்லாவிட்டால் 60 வயதிலும் 35 வருடமாக ஒரு துறையில் யாருமே நெருங்க முடியாத சூரியனாக இருக்க முடியாது.
          நீங்கள் யாரை முன்னோடியாக நினைக்கிறீர்களோ அவர்களை ஏதாவதொரு கோணத்தில் விமர்சிக்க முடியும், ஆனால் அவர்களிடிமிருக்கும் பின்பற்ற வேண்டிய விடயங்களைத்தான் இளைஞன் பின்பற்றுகிறான். ரஜினியிடம் பின்பற்ற வேண்டிய விடயங்கள் மிக அதிகமாக இருப்பதால்த்தான் ரஜினி பல இளைஞர்களுக்கு இன்றும் தனித்துவமான வழிகாட்டியாக இருக்கிறார்.


கருத்துகள் இல்லை: