கவிதை எழுதினேன்
தப்பும் தவறுமாய்
அர்த்தமே இல்லாமல் ..
கேட்டால் காதலுக்காக !!!
பேசினேன் உன்னிடம்
ஏதேதோ கொச்சையாய்
நீயும் பதிலுக்கு பேசினாய்
அர்த்தமே இல்லாமல் !!
வீண் விவாதங்கள் எல்லாம்
உன்னாலே செய்தேன் ..
உனக்கு விருப்பமானதுக்கு !!!.
என்னில் ஆயிரத்தெட்டு
குறைகளை வைத்துக்கொண்டு
கேட்டால் முற்போக்குவாதியாம் ...
முத்தமிழே முழுமையாய்
என் மனதில் எப்போ ? ..
தாகத்துக்கு தண்ணீர் கேட்டேன்
தராமல் சென்றாய் என்னை
பார்த்துக் கொண்டே
என் உயிர் போகும்வரை !!
நீயா பேசுகிறாய்
மனித நேயத்தை பத்தி ? ..
ஆன்றோரும் சான்றோரும்
என்னிடம் கேட்டால்
என்ன சொல்வேன் ..
இதை பத்தி !!
விழி மூடி யோசிக்கிறேன் ..!!! .
முத்தமிழே முழுமையாய்
என் மனதில் எப்போ ? ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக