தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/24/2010

உன்னைக் கண்டதும் காதல் வந்தது.

காதல் வந்தது...
உன்னைக் கண்டதும்.
கண்கள் கண்டது....
உந்தன் புன்னகை.
உலகம் உருண்டது....
உன்னைத் தேட.
என்னுருவம் குலைந்தது.....
உன்வாசம் அடைய.

இமைகள் மூடுதே புயற் காற்றில்.
புருவம் உயருதே உனைப் பார்த்து.
விழிகள் பேசுதே உனை நோக்கி.
வார்த்தை மயங்குதே உன்நடை கண்டு.
உன் பாதம் பட்ட பூமி இது
வைரக்கல்லாய் மாறும் நேரமிது.
உன் பாசம் பட்ட பார்வை இது
உன்னை நோக்கி நகரும் நேரமிது.

அமைதி தேடுதே கடல் அலைகள்.
அகிலம் போற்றுதே உன் அதிசயங்கள்.
அழகே அழகு உன் அழகு.
அடிமை ஆனது இவ் உலகு.
நீ பேசும் மொழிகள் எல்லாம்
நீந்திப் போகுது நிலவிற்கு.
மழையாய் விழும் உன் கவித்துளிகள்
மண்ணில் மயங்குது மதுவாய்.

கருத்துகள் இல்லை: