தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/21/2010

இது நம்ம ஊரு நல்ல ஊரு

கோவை ஒரு பார்வை

இது தொழில் வளர்ச்சியிலும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும் முன்னாடி தென்னிந்தியாவின் மான்சிஸ்டர் .. இப்ப ப்ளாட்ஸ்.டிராப்கிஸ் அதெல்லாம் சரி. ஊருக்குள்ள வந்தாலேஒரு நிம்மதி ஃபீல் பண்றீங்களான்னு கேட்டா நூத்துக்கு 99 பேர் யெஸ்னு சொல்வாங்க.

என்ன பியூட்டின்னா முன்னை விட இப்பல்லாம் நிறைய தொந்திரவுகள். பர்ஸ்ட் கொசு.. கொசுப்படைன்னே சொல்லலாம்.

மருந்து அடிக்க கார்ப்பரேஷனுக்கு மறதி. ஆனா மறக்காம இனவிருத்தி பண்ற கொசு!

கதவை எல்லாம் மூடி வச்சாக்கூட ஹேங்கர்ல தொங்கற சட்டையை ஆட்டினா 100 கொசு பறக்கும்.

அப்புறம் மழையே இல்லை!

காவிரிக்கு அந்தப் பக்கம் அடிக்கற மழை கூட இந்தப் பக்கம் சொட்டு சொட்டா தெளிச்சுட்டு போவுது. வருஷத்துல 6 மாசம் வெய்யில். மீதி 6 மாசம் கடுமையான வெய்யில்.

பருத்தி பூமிடா இதுன்னு எதிர் வீட்டு பாட்டி சொல்றப்ப 'ஆன்னு' வாயைத் திறந்துகிட்டு கேட்டது ஞாபகம் வருது.

அதுக்காக பன்மாடிக் குடியிருப்புகள் விற்பனை குறையுதான்னா 'நோ'

பூமி பூஜை போடறப்பவே எல்லா வீடும் புக் ஆயிருது.

லிப்ட் இருக்கா.. கார் பார்க்கிங்க் இருக்கா.. ஹாஸ்பிடல் வசதி பக்கத்துல இருக்கானு வயசான கூட்டம் ஒண்ணு வந்து செட்டில் ஆயிருக்கு.

வருஷம் முழுக்க பட்டீஸ்வரர் (பேரூர்),முருகர்(மருதமலை) இவங்க ரெண்டு பேரும் முழுக்க கவர் பண்ணிடறாங்க. அத்தனை பேரும் அவர் பின்னாடி மந்திரிச்சு விட்ட மாதிரி தெருவுல போகறதைப் பார்த்தா ஸம்திங்க் இருக்குன்னு தோணுது.

கடவுள் இல்லைன்னு சொல்ற கூட்டம் கூட நாலு தெருவையும் விடியற்காலையில சுத்தி வரதைப் பார்க்கலாம்!

ஸோ கால்டு கழகக் கண்மணிகள்!

டாக்டர் அட்வைஸ். டிராபிக் ரோட்டுல போனா அடிபட்டுக்குவோம்னு பயமோ.. இல்ல.. பொல்யூஷன் பிரச்னையோ.. சித்திரை வீதி.. உத்திரை வீதில ஜாம் ஜாம்னு நடக்கலாம்.

வாக்கிங்க் ப்ளஸ் புண்ணியம்னு ஆத்திகக் கூட்டம் கணக்கு போடற மாதிரி நாத்திகக் கூட்டமும் நாசூக்கா நடக்குது.

மழையே வராதுன்னு கார்ப்பரேஷன் முடிவு கட்டிட்ட மாதிரி தெருவுல மண்ணே இல்லாம காங்கிரீட் ரோடு போட்டாச்சு.

மழை நீர் சேகரிப்புன்னு கண்டு பிடிச்ச நல்ல விஷயத்தையும் ஊத்தி மூடியாச்சு.

திடீர்னு ஏதோ ஒரு பேர்ல கூண்டு வச்சு செடி வளர்த்து மரமாக்கி அப்புறம் ஏதோ காரணம் சொல்லி வெட்டிப் போடற வித்தை மனுஷங்களுக்குத்தான் சாத்தியம்.

வீதிகள்ல இந்தக் கொடுமை அரங்கேறினதைப் பார்க்கறப்ப 'வளர்ப்பானேன்.. வெட்டுவானேன்னு' தோணும்.

இவ்வளவும் மீறி எப்பவோ தீர்மானிச்ச சட்ட திட்டங்கள் முருகர் காப்பாத்துது இன்னமும்னு நினைக்கறப்ப (அதுக்கும் அப்பப்ப சவால் வருது) ஒரு பெருமூச்சு ரிலீஸ் ஆகறதைத் தடுக்க முடியல.

அப்படின்னா கோவை பத்தி நல்ல விஷயமே இல்லியான்னு நினைச்சிராதீங்க. நான் சொல்ற இந்த கம்ப்ளெயிண்ட்ஸ் எல்லா ஊருக்கும் பொதுதானே!

அப்பப்ப கோவை பத்தி பேசுவோம்...

எழுத்து :அ.ராமநாதன்

கருத்துகள் இல்லை: