எரி மலையாய் இருந்த என்னை
பனி மலையாய் மாற்றிய - நீயே
கோடைக் கால வெயிலை போல் -ஏன்
என் மனத்தை சுட்டு விட்டாய் !
பற்றி எரியும்
மெழுகு வர்த்தியாய்
என் கண்களை உருக வைத்தாய்
உன் மனம் சிலை போல்
அழகானது என்று நினைத்தேன்
சிலை அழகனாலும் - அது
கல் என்று நிருபித்து விட்டாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக