தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/25/2010

மறந்த (மறைந்த ) க(வி)தை

என் அன்பனே....
நம் காதல்
பரிமாறிக்கொள்ளப் படாதபோது
நான் தூதாக
பௌர்ணமி நிலவைத்தான்
அனுப்ப நினைத்து
என் மனதில்
உள்ளவற்றையெல்லாம்
உளறிக்கொட்டினேன்........!

பாவம்......
நீ இவ்வுலகைவிட்டு
பிரிந்துசென்றதால்
அவற்றை உன்னிடம்
உரைக்கவியலவில்லை-என்று
என் முகம்
பார்த்து சொல்லமுடியாமல்
கருப்பாடையணிந்து
அன்று அமாவாசையாகியது
அந்நிலவு........!

ஆனால்......
உயிருள்ளவரை
என் உள்ளத்திலும்
தாய் தமிழுள்ளவரை
என் கவிதைகளிலும்
நீயும் நம் காதலும்
வாழ்ந்துகொண்டேதான் இருப்பீர்கள்........!

நன்றி : செல்வி .எஸ்தர்

கருத்துகள் இல்லை: