நமது வாசகர் வேண்டுகோளின்படி எனது நண்பர்களின் மூலம் வகைபடுத்தியுள்ளேன்....நீங்களும் உங்களது நண்பர்களை தெரிந்து கொள்ளுங்கள்......
நண்பர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
முதல் வகையில் உள்ளவர்கள் பனை மரத்தை
போன்றவர்கள். பனை மரம் நடப்ப்படும்போது
மட்டும் தண்ணீர் விட்டால் போதும். பின்னர் விட
வேண்டியதில்லை. ஆனால் காலமெல்லாம் பலன்
தந்துகொண்டே இருக்கும். அது போல அந்தவகை நண்பர்கள்
இருப்பார்கள்.
இரண்டாவது வகை நண்பர்களை தென்னை
மரத்திற்கு ஒப்பிடலாம்.அடிக்கடி தண்ணீர்
பாய்ச்சினால் தன பலன் தரும். அதுபோல
இந்தவகை நண்பர்களுக்கு நாம் அடிக்கடி
உதவிகள் செய்தால் தான் இவர்கள் நட்பின்
பயன் நமக்கு கிடைக்கும்.
மூன்றாவது வகை நண்பர்களை பாக்கு மரத்திற்கு
ஒப்பிடலாம். தொடர்ந்து தினசரி தண்ணீர் ஊற்றினால்
தான் பலன் கிடைக்கும். அதுபோல இவ்வகை நண்பர்கள்
நாள்தோறும் நம்மிடமிருந்து பயன் கிடைக்குமா என்று
பார்ப்பார்கள். பயன் கிடைக்கவில்லை என்றால் நம்மிடமிருந்து
விலகி சென்று விடுவார்கள்.
நல்ல நட்பை தேர்ந்தெடுங்கள். பலன் பெறுங்கள்.
(நன்றி : வாழ்வியல் சிந்தனைகள்)
இடுக்கை :அ.ராமநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக