என்னவென்று நான் சொல்ல
வழிநெடுக தோரணம்
தலைவரின் வருகையை
வரவேற்க.....
அண்ணார்ந்து பார்த்தேன்
ஏணியிலிருந்து, கீழே
கனவெல்லாம் மேலே உயர...
தலைவர் சென்றபின்னாலும்
சண்டை மூண்டது
அவர் உக்கார்ந்த
சேரை தூக்குவதில்..
ஆம்! ஒருசாண்
வயிற்றிலும் பலகாரம்
என்னடா என்னை
கவனிக்கவில்லையென்று..
ஏசியும் தன் வேலையை
சரியாக செய்தது..
தலைவரின் சயனத்தில்
இடையூறு இல்லாமல்..
ஆம்! கால்கள் இடம்
மாற மறுத்தன
கதிரவனும் தன் வேலையை
சரியாக செய்தது..
மனமோ ஸ்ப்பா என்றது..
திட்டங்கள் எல்லாம்
போட்டதும் வால்களின்
கைகளில் தஞ்சம்..
ஆம்! நாளைக்கு
கிடைக்கும் என்ற
நம்பிக்கையில்
நாளும் நாளும்...
அடுத்த தேர்தலிலும்
தலைவர்தான் வெற்றி!
யார்வந்தா என்ன
பணம் நிறைய
கிடைக்குமா?...(இப்படியும் மக்கள்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக