தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/25/2010

நான் உன்னை நேசிக்கின்றேன்

அன்பே

எனது விடியல் என்பது
உந்தன் விழியில்
எனது மரணம் என்பது
உந்தன் மடியில்…..!!!!!!!

நீ இன்றேல்
நான் நிச்சயம்
தற்கொலை செய்ய மாட்டேன்.
என் உணர்விலும்
உயிரிலும் கலந்திருக்கும்
உன்னைக் கொல்ல
எப்படி மனம் வரும் எனக்கு…..?
தினமும் சொல்ல வேண்டும்
என்றுதான் வருவேன்…
ஆனால் உன் கண்களால்
சிவப்பு கொடி பிடிக்கிறாயே…!!!!!

உன் சிரிப்பினால்
என் வார்த்தைகளை சிறை பிடிக்கிறாயே….!!!!!

என் இதயத்தில்
ஓட்டை என்று டாக்டர்
சொன்னபோது நம்பவில்லை..
என் இதயத்தில் நீ நுழைந்த போதுதான்
அது புரிந்தது
நானோ உன் காதல் வேண்டும் என்றேன்.
நீயோ என் கவிதை தான் வேண்டும் என்றாய்…
அடி பைத்தியக்காரி…
எப்படி கவிதை எழுதமுடியும் என்னால்
உன் காதல் இல்லாமல்….?

இந்த உலகத்தில் சிறந்த தண்டனை
என்னவளின்
உன்னைக் கண் கொண்டு
பார்க்கவில்லை உயிர் கொண்டு
பார்க்கின்றேன்....

மரத்தில் பறிக்க பறிக்க மலரும் மலரல்ல
உன் மேலான என் நட்பு
பறித்தால் திருப்பி முளைக்காத
மரம் என் நட்பு...

கண்கள் செய்யும் சிறு தவறுக்கு
இதயம் அனுபவிக்கும் ஆயுள்
தண்டனை காதல்...

ஆனால் ஆயுள் வரை சுகமான
வதிவிடம் உன் நட்புள்ளம்..
நட்பை காதலிக்கின்றேன்
உன்னை சுவாசிக்கின்றேன்...

அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
அனுமதியில்லாக் குடியிருப்பு
உன் இதயத்துக்குள் என் இதயம்....

வாழ்க்கையில் சந்தோஷம் வேணும்
என்றால் காதலை நேசி...

சந்தோஷமே வாழ்க்கையாக மாற
வேண்டும் என்றால் நட்பை நேசி

நான் உன்னை நேசிக்கின்றேன்
உன் நட்பை சுவாசிக்கின்றேன்...

நன்றி : வாசு

கருத்துகள் இல்லை: