தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/25/2010

என் உயிர் நீதானே

என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
என் உயிர் நீதானே
உன் உயிர் நாந்தானே
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே இன்பம்
காண்போமே

( என் உயிர்.....)

பூங்கொடி தள்ளாட
பூவிழி வந்தாட
காதலை கொண்டாட
ஆசையில் வந்தேனே

(பூங்கொடி.....)

நீ தந்த சொந்தம் மாறாதே
நான் கண்ட இன்பம் தீராதே
உன்னருகில் உன் இதழில்
உன் மடியில் உன் மனதில்
ஆயிரம் காலங்கள் வாழ்ந்திட
வந்தேன்

(என் உயிர்.....)

பாவையின் பொன்மேனி
ஜாடையில் தானாட
பார்வையில் பூந்தென்றல்
பாடிட வந்தேனே

நீ கொஞ்சும் உள்ளம் தேனாக
நான் கொள்ளும் இன்பம் நூறாக
என்னருகில் புன்னகையில்
கண்ணுறங்கும் மன்னவனே
காவியம் போலொரு வாழ்வினை
கண்டேன்

(என் உயிர்.....)

(மிக அருமை ,நீண்ட நாட்களுக்கு பிறகு இளையராஜா இசையால் உருவான "பிரியா" பட பாடலை நினைவுக்கு கொண்டுவந்ததுக்கு ) 

நன்றி : (பெயர் வெளியிட வேண்டாம்
                 என கேட்டு கொண்ட வாசகர்/கி ) 

கருத்துகள் இல்லை: