தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/19/2010

வானம்பாடியாய்...

உன்னை
நான் முதலில்
சந்தித்த நொடிகளை
திருப்பிப்பார்த்து.......

உன்னுடன்
நான் பேசியபோது
சிரித்ததை
சிந்தித்து.......

உன்னை
நான் எண்ணிய
தருணங்களில்
தோன்றியவற்றை.......

உனக்கு
நான் எழுதிய
கடிதங்கள் முழுவதும்
கவிதைகளாய்.......

உன்னிடம்
நான் அவைகளைக் கொடுக்க
தேடித் தேடி அலைகிறேன்
வானம்பாடியாய்.......!

நன்றி : செல்வி;எஸ்தர் திண்டுக்கல்

கருத்துகள் இல்லை: