தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/03/2010

நான்.....

"நட்பை" மதியாதவன்

"உணர்வுகளை" புரியாதவன்

"உள்ளங்களை" அறியாதவன்

"ஊக்கம்" இல்லாதவன்

"அன்பே" அற்றவன்

"அமைதியை" அழிப்பவன்

அழியா "அகந்தை"யுடைவன்

எல்லையில்லாமல் "ஏமாற்றுபவன்"

"ஏக்கங்களை" மட்டுமே தருபவன்

"சிந்திக்க" மறந்தவன்

"சிந்தனை" அற்றவன்

"நற்பண்பு" இல்லாதவன்

"நன்றை" அன்றே மறப்பவன்

"நயவஞ்சகத்தை" நன்கறிந்தவன்

"கோபத்தின்" உற்றவன்

"வெறுப்பின்" கொற்றவன்

"கனவுகளை" கலைப்பவன்

"நினைவுகளை" நிர்மூலமாக்குவபன்

"பாசத்தை" பழிதீர்ப்பவன்

"நேசத்தை" நெருங்கவிடாமல் செய்பவன்

"தோல்விகளை" தோற்றுவிப்பவன்

"வெற்றிகளை" வேர்அறுப்பவன்

"விதிக்கு" வித்திடுபவன்

"விமர்சனத்தின்" வித்தகன்

"தவிக்க" விடுபவன்

தன்நிகரில்லா "தலைக்கனம்" பிடித்தவன்

உங்கள் கண்ணோட்டம் அதுவானால்....!!

இவன்

~~~~எவனோ ஒருவன்

கருத்துகள் இல்லை: