தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/30/2010

இதயம் பேசுதே

உன் நினைவு பிறழாமல்
மௌனமொழியிலே
கனவுகள் வந்து
கவிபாடும் கணநேரமும்
உன் நினைவுகளே!

காதலின் மௌனராகம்
பூவின் வழியாய்
மாலையானது
உன் முதல்பார்வையும்
அதை உறுதிசெய்தது.

கடிகாரமுட்கள் சுற்றும்
நேரம் தவறாமல்
காணாமல் தேடும்
விழிகள் போல‌
மழைத்தூறும் சாரல்
என் மனமெங்கும்
உல்லாச பறவைகள்
சிறகடிக்கும்
உன்னை நினைக்கையில்

காற்றிலாடும் உன் கூந்தல்
மயக்கும் மல்லிகையாய்
மறுமொழி பேச நேரமின்றி...

கருத்துகள் இல்லை: