சந்தேக புத்தி எனக்கும் வந்து விட்டது
நீ என்னை காதலிக்கிறாயா ?
இல்லை என் கவிதைகளை
காதலிக்கிறாயா ?
என்னை பார்த்து ஏளனமாய்
சிரிக்கின்றன என்
கவிதைகள்
நேற்று அவைகளுக்கு -நீ
முத்தம் கொடுத்தாய்
போலும்
பிரிஜ் க்குள் இருந்த
ஆப்பிள் போல்
குளிர்ந்து போய் இருந்தது .
நீ தொட்டு விட்டாயாம்
என்று
இன்னமும்
குளிக்காமல்
இருக்கின்றன .
பாவம் அவை .
உன் கூந்தலை கொஞ்சம்
எனக்கு
அனுப்பி வை .
இங்கு
வெயில் கொடுமையாக
இருக்கிறது .
அதில் நான் இளைப்பாறி கொள்ள
போகிறேன் .
உனக்கும் எனக்குமான
இடைவெளிகளை
என் கவிதைகளே
நிரப்புகின்றன .
சரி எல்லாம் இருக்கட்டும்
கடைசியாய் சொல்லுகிறேன்
நீ என்னைத்தான் காதலிப்பதை
என் கவிதைகளிடம்
சொல்லிவிடு .அவைகளின்
அட்டகாசம்
என்னால் தாங்க முடியவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக