"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! கோவை அ.ராமநாதன்
3/30/2010
வறுமையின் நிறம் சிவப்பா ...
என்னசெய்து என்
செல்லத்தின் அழுகையை
நிப்பாட்ட வழியேதும்
உண்டா?...
கைகள் உண்டு
வாரியணைக்க
தாலாட்டு பாடி
தூங்க வைக்க
தொட்டில் உண்டு
கொஞ்சி கொஞ்சி
அவனை தூங்க
வைக்க மடி உண்டு
வெளியில் அழைத்து
செல்ல கால்கள் உண்டு
என்னசெய்து அழுகையை
நிப்பாட்ட ...
அவன் பசிதீர
மார்பு உண்டு
இருந்தும் இல்லையே
சுரக்க சுரக்க
அது என்ன
அமுதசுரபியா
என் பசியை
தாங்கிக் கொள்வேன்
அவன் பசி?.............
இடுக்கை : அ.ராமநாதன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக