"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! கோவை அ.ராமநாதன்
3/10/2010
விட்டுப்போனால் செத்துப்போவேன்..
விட்டுப்போனால் செத்துப்போவேன்..
விட்டுச்செல்லாதே,
உன் கண்கள் என்னும் கத்திக்கொண்டு..
குத்திச்செல்லாதே,
காதல் கனவு இருவர்காண்பது..
கடந்துசெல்லாதே,
என்னை மட்டும் தனியாய் விட்டு..
நீங்கிச்செல்லாதே,
கத்திகுத்தி நெஞ்சம் கரையுது..
காயமில்லையா.?,
தனிமையிலே கனவுகள் காண்பது..
பாரமில்லையா.?,
தூரம் நின்று இதயம் வாடுது..
பாவமில்லையா.?,
உனக்கென்ன தெரியாதா.?,
என் காதல் புரியாதா.?,
காதல் என்ன பேருந்தா.?,
மாறி மாறி பயணிக்க.,
காதல் கடவுளின் பரிணாமம்..
காதலே கடைசி பரிமானம்..
காதலே என் மதம்..
காதலி நீ குலதெய்வம்..
பிஞ்சு உன் மனசுக்கு.,
பாசாங்கு பரிட்சயமா.?,
காந்தம் என் கண்களுக்கு.,
கண்ணீர் தான் அவசியமா.?,
விட்டுப்போனால் செத்துப்போவேன்..
விட்டுச்செல்லாதே,
உன் கண்கள் என்னும் கத்திக்கொண்டு..
குத்திச்செல்லாதே,
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக