தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/01/2010

உயர்வான இருக்கைகள் ...


எப்போதும்
சுகமாயிருப்பதில்லை
உட்கார்ந்திருத்தல்...


எழுந்தால் போதும்
என்னுமளவு
சிரமமாகியும் போவதுண்டு...


நின்று கொண்டிருப்பது கூட
நிறையவே சிரமமாய்தெரிகிறது
இடம் கிடைக்காத
ஏமாற்றத்தில்...


எழுந்து வழி விட்டவர்கள்
ஏமாளிகள் ஆவதுண்டு
உட்கார்வதற்கான
போட்டியே
வலிமையுணர்த்தும்
வழியென்றான பின்...


உட்கார்ந்திருக்கும்
வரை தான்
உத்திரவாதம்
என்றுணராமல்
உட்கார்ந்திருப்பவரைக்
காட்டிலும்
உயர்வாகத் தெரிகிறது...

உட்கார்வது யாராயினும்மாறாமல்
உட்கார்ந்திருக்கும்
இருக்கைகள்...

கருத்துகள் இல்லை: