தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/26/2010

சத்தியம் இது சத்தியம் (முதல்நாள் வார்த்தை)


சத்தியம் இது சத்தியம்
முதல்நாள் வார்த்தை....
மறுநாள் போயி  குடிக்கப்
போகும் வரை ...


எதற்கு குடிக்கிறாய் என்று
கேட்டாலும் உன்னிடம்
ஆயிரம் காரணங்கள் உண்டு...
காலைமுதல் மாலைவரை
உழைக்கும்போது தெரியாத
மயக்கம் இரவு ஆனதும்
மயக்கம் வாந்தியுடன்...


நீ வருவாய் சாப்பிட
என்று காத்திருக்கும்
குடும்ப அங்கத்தினரின்
பசிப் புலம்பல்கள் உனக்கு
கேட்க வாய்ப்பில்லை....


கர்ண  வள்ளலைப் போல‌
மயக்கம் தெளியும்முன்
வாரிவாரி வழங்கினாய்
தெளிந்தபின் அதனை
தேடுவது பரிதாபம்....


இருக்கும்போதே அனுபவிடா ராஜா....
என்ற உன் எண்ணம்தெரியாமல்
 நீ இல்லாமல் போனதும் ஆற்ற
முடியாதுயரத்தில் உன் மனைவியோ
விதவைக் கோலத்தில்.....

கருத்துகள் இல்லை: