தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/08/2010

மாசுபடும் என் மொழி ?

மாசு........எங்கும்............எதிலும் மாசு.

உண்ணும் உணவில், குடிக்கும் நீரில், சுவாசிக்கும் காற்றில், இப்படி எங்கும் எதிலும்  மாசு...........


பேசும் மொழியையும் அது விட்டுவைக்கவில்லை...


இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மொழி மாசுபடுவதை தவிர்க்க, எத்தனையோ தமிழறிஞர்கள் பெருந்தொண்டாற்றினார்கள். பட்டியலிட்டால் மாளாது.....ஆனாலும், மாசு நீட்சியை தவிர்க்கமுடியவில்லை.

தனித்தமிழ் இயக்கங்கண்ட, மறைமலை அடிகள் பெயரை, புகைவண்டி நிலையத்திற்கு பெயராக சூட்டுவதோடு நின்றுபோனது......... நமது மொழியார்வம்.

உயர்சாதி நாங்கள் என்ற வரட்டு ஆணவத்தின் மீதான காதலில், நம்மில் பலரும் வடமொழிச் சொற்களை பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம். அதை மாற்ற முயலும் முயற்சியாக சிலவற்றை இங்கே காண்போம்.


நடைமுறை வாழ்க்கையில் மாறிப்போன சில தமிழ் வார்த்தைகள்........
தமிழ் மொழி       வடமொழி                              தமிழ் மொழி        வடமொழி


சோறு                    சாதம்                                                    குழம்பு           சாம்பார்
சுவைநீர்               ரசம்                                                        வரிசை           பந்தி
நலமா?                 சவுக்கியமா?                                      மகிழ்ச்சி        சந்தோஷம்
அறிவாற்றல்     புத்திசாலித்தனம்                           விளக்கு         தீபம்
பூப்பலி                     பூஜை                                       குடமுழுக்கு     கும்பாபிஷேகம்
பிறவிப்பயன்     ஜென்ம சாபல்யம்                         வீடுபேறு     மோட்ஷம்
கணவன் மனைவி   பதியும், பாரியாளும்,            துறவறம்  சன்னியாசம்


இப்படிய எத்தனையோ.........?

அன்பிற்கு பிரியமும், குறும்புக்கு சேஷ்டையும்
அமைதிக்கு சாந்தியும், நாணத்திற்கு சங்கோஜமும்
நட்புக்கு சினேகமும் இழப்பிற்கு நஷ்டமும்
பகைக்கு விரோதமும் விருப்பத்திற்கு இஷ்டமும்
அறிவுக்கு புத்தியும். நினைவிற்கு ஞாபகமும்
நல்வாய்ப்பிற்கு அதிர்ஷ்டமும் கனவுக்குப் பதில் சொப்பணமும்

பரவலாக பயன்படுத்தப் படுகின்றன.

காற்று - வாயு இரவு - ராத்திரி
நிலா - சந்திரன் ஏனம் - பாத்திரம்
அறம் - தர்மம் வினை - கர்மா
வானம் - ஆகாயம் செய்யுள் - கவிதா

என்று தமிழாக்கம் செய்யும் அதிமேதாவிகளையும் நாம் காண்கின்றோம்.



தமிழராகிய நாம் இன்று முதல்,பைந்தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துவோம்.
மொழி மாசுக்கு கட்டுப்பாட்டுகள் விதிப்போம்.


" தலை போயினும் தயங்காது தமிழ்-போற்றிடத்துணிவாய்
தமிழே இனி எனதாருயிர் - தலை தூக்கிடு தோழா...."


வாழ்க நிரந்தரம், வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே
வானமளந்தானைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினும், தன்மணம் வீசி, இசைகொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி, எங்கள் தமிழ் மொழி, என்றென்றும் வாழியவே.

கருத்துகள் இல்லை: