தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/12/2010

காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசனின் கவிதை ஒன்று சில நாட்கள் முன்னர் எனக்கு மெயிலில் வந்தது. என்னைக் கவர்ந்த கவிதை உங்களையும் கவரும். கவிதை இதோ....





பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்



பிறந்து பாரென இறைவன் பணித்தான்!


படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்


படித்துப் பாரென இறைவன் பணித்தான்!


அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்


அறிந்து பாரென இறைவன் பணித்தான்!


அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்


அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!


பாசம் என்பது யாதெனக் கேட்டேன்


பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!


மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்


மணந்து பாரென இறைவன் பணித்தான்!


பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்


பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!


முதுமை என்பது யாதெனக் கேட்டேன்


முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!


வறுமை என்பது என்னெனக் கேட்டேன்


வாடிப் பாரென இறைவன் பணித்தான்!


இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்


இறந்து பாரென இறைவன் பணித்தான்!


'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்


ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!


ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி


'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!


நண்பர்களே...
       எங்கள் சிவகெங்கைச் சீமையின் முத்து கவிஞர் கண்ணதாசனின் கவிதை உங்கள் மனதுக்குள் மலர்ந்ததா..?



கருத்துகள் இல்லை: