என் தனிமையின்
போதெல்லாம் - நாம்
இதழ் வருடிய
வார்த்தைகளையே
அசை போடுகிறதே உள்ளம்
இதுதான் காதலா?
மற்றவர்கள் கேலியில் - நீ
அகப்பட்டுக் கொண்டால் - என்
அகம் வதைபடுகிறதே
அதுதான் காதலா?
இமைகளின் இயக்கம்
நிறுத்தி - நீ
உலவும் இடங்களில்
உனையே தேடல்
கொள்கிறதே விழிகள்
இதுதான் காதலா?
அருகினில் நீ
இல்லாத போதும்
உன்னுடன் உறவாடி
உரையாடி மகிழ்கிறேனே
அதுதான் காதலா?
எனக்காக நீ
தந்தவை தவிர்த்து
சுவாசக் காற்று உட்பட - நீ
வருடிய அனைத்தையும்
சேகரிக்கிறேனே
இதுதான் காதலா?
யார் கேட்டும்
இல்லையென்ற ஒன்றை - நீ
கேட்க நினைக்கும்போதே
கொடுக்கத் தோன்றுமே
அதுதான் காதலா?
பிரிவுகள் நேரும்போது
ஏதோவோர் உணர்வு - நம்
விழிகளில் நீர்நிரப்பிச்
செல்கிறதே...
அதுதான் காதலா?
ஊரே நம்முறவை
காதலென்ற போதும்
நீமட்டும் மறுக்கிறாயே
'நாங்கள் நண்பர்களென்று'...
எது காதல் தெரியவில்லை !
இந்நிகழ்வுகள் அனைத்தும்
நட்பிலும் சாத்தியமென்பதால்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக