தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/19/2010

அன்பே கடவுள்

நான் பலரிடம் "விட்ட" கதைகளை விட்டு தள்ளுங்க. அந்த கதை எல்லாம் இப்போ வேணாம்! உண்மையிலுமே, கதை சொல்ல போறேன். கதை வேண்டாம் என்று இருக்கிறவங்க, இங்கேயே..........பாருங்க.


பல கதை புத்தகங்கள் படித்து இருந்தாலும், பலரிடம் கதை கேட்டு இருந்தாலும், என் நண்பரிடம்  கேட்ட கருத்துள்ள கதைகளில், என்னை மெருகேற்றி கொள்ளும் அம்சங்களும் அமைந்து இருந்ததால், அவற்றை மறக்க முடியாது.
அவற்றில் ஒன்று:
அன்பே கடவுள்:
        மார்டின் என்பவன், தினமும் ஜெபங்கள் செய்வதிலும் ஞாயிறு தவறாமல் ஆலயம் செல்வதிலும், ஜெப கூட்டங்களுக்கு தவறாமல் செல்வதிலும் இருந்தான். நாட்கள் ஆக ஆக, எப்படியும் ஒரு நாளாவது இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை, பேராசையாய் வளர்ந்து கொண்டு வந்தது.

      ஒரு நீண்ட ஜெபத்துக்குப் பின், தன்னை சந்திக்க இறைவன் எப்படியும் வர வேண்டும் என்று உருக்கமாய் ஜெபித்து விட்டு சென்றான்.
       அன்று இரவு கனவில், ஒரு பேரொளி தோன்றியது. அந்த ஒளியின் நடுவில் இருந்து வந்த குரலில்: "நாளை நீ, என்னை காண்பாய்."
        சந்தோஷத்துடன், மதிய விருந்து தயாரித்தான். இறைவனுக்கு பரிசாக கொடுக்க, ஒரு பெரிய சால்வை/போர்வை பரிசாக வாங்கி வந்து வைத்தான்.
      மாலை நான்கு மணி ஆனது. இறைவன் வரவில்லை.
ஒரு வயதானவர், காலை நொண்டி கொண்டு அவர் வீட்டு வாசலில் வந்து நின்று உணவு கேட்டார். முதலில், அவருக்கு உணவு மறுத்து விட்டு உள்ளே சென்று விட்டான், மார்டின்.
மீண்டும் அந்த முதியவரின் குரல் கேட்டு, மனது கேட்காமல், உள்ளே இருந்த உணவில், தன் பங்கை எடுத்து முதியவருக்கு கொடுத்து உண்ணக் கொடுத்தான். முதியவர், சந்தோஷமாக சாப்பிட்டு விட்டு வாழ்த்தி விட்டு சென்று விட்டார்.


மாலை மணி ஐந்து ஆனது. இறைவன் வரவில்லை.


வெளியில் கடைத்தெரு வரை சென்று , இறைவன் வருகிறாரா என்று பார்த்தான். மெல்லிய மழைச்சாரலில், ஒரு இடத்தில் ஒதுங்கி நின்ற ஒரு ஏழைப் பெண்ணையும், குளிரில் வாடி கொண்டு இருந்த அவளது கைக்குழந்தையும் கண்டான். கண்டும் காணாதது போல அவர்களை கடந்து வீட்டுக்கு வந்தவனுக்கு, மனதில் ஒரு நெருடல். இறைவனுக்கு வாங்கி வைத்து இருந்த அந்த சால்வையை எடுத்து கொண்டு மீண்டும் வெளியே சென்றான். அந்த ஏழைப் பெண்ணிடம் கொடுத்து விட்டு, பால் வாங்க கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு, வீடு திரும்பினான்.


மாலை ஏழு மணி ஆனது. இறைவன் வரவில்லை.


அவனது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு வயதான பாட்டிக்கு திடீரென்று உடல் நலம் சரியில்லாமல் போனது. அவருடன் அவரது 14 வயது பேரன் மட்டும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து, மார்டினை உதவிக்கு அழைத்தான்.
தான் அங்கு உதவ சென்று இருந்த நேரம், இறைவன் வந்து விட்டால்............... தயங்கிய மார்டின், சிறுவனின் முகம் கண்டு, நிலைமையை உணர்ந்து கொண்டு, அவனுடன் சென்றான். பாட்டியை மருத்துவமனையில் சேர்த்து விட்டு, அவருக்கு வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்து விட்டு, வேலைக்கு சென்று இருந்த அவரின் மகனுக்கும் தகவல் அனுப்பி விட்டு, அவர் வரும் வரை காத்து இருந்தான். பாட்டி, நன்றாக இருப்பதை அறிந்து கொண்டு, இரவு, வீட்டுக்கு வந்தான்.


இரவு பத்து மணி ஆனது. இறைவன் வரவில்லை.


இறைவன் வந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. இறைவன் இல்லையோ? தன்னை ஏமாற்றி விட்டாரோ? என்ற குழப்பங்களுடன், பைபிள் எடுத்து வாசிக்க உட்கார்ந்தான்.


மத்தேயு 25: " பசியாய் இருந்தேன், உண்ணக் கொடுத்தீர்கள்;
தாகமாய் இருந்தேன், என் தாகத்தை தீர்த்தீர்கள்;
அன்னியனாய் இருந்தேன், என்னை சேர்த்து கொண்டீர்கள்;
உடை இல்லாதிருந்தேன், எனக்கு உடை தந்தீர்கள்;
நோயுற்று இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்;
காவலில் இருந்தேன், என்னை பார்க்க வந்தீர்கள் ....................
மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவருக்கு நீங்கள் எதை செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்கு சொல்கிறேன்."


இரவு பத்தரை மணி ஆனது. இறைவன் வந்து விட்டு சென்றதை புரிந்து கொண்டான்.


நான் புரிந்து கொண்டது: கடவுள் இருக்கிறார் என்று என் சுயநல வாழ்க்கை நலத்துக்காக மட்டும் நம்புவது, இறை நம்பிக்கை அல்ல. ஆலயம் செல்வது மட்டுமே ஆராதனை ஆகாது. கடவுளை தேடி, அங்கும் இங்கும் அலைவதை விட - அதற்காக நிறைய செலவழிப்பதை விட - நம்மை சுற்றியுள்ள மனிதர்களிடம், அன்புடன் நம் கடமையைச் செய்தால் - மனித நேயத்துடன் நன்மைகளை செய்தால்

கருத்துகள் இல்லை: