தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/22/2010

இப்படியும் வெற்றியா ?

சென்ற வாரம் நான் என் நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்ததில் ,எனக்கு தோன்றிய எனது எண்ணத்துடன் சில கதைகளையும் சேர்த்துள்ளேன் ......

ஒரு man - hero வாக இருந்தான்.
அடுத்த கட்டமாக, ஒரு பிரமாண்டமான வளர்ச்சி நிலை.
உலகை காக்கும் பொறுப்பில், முதல் நாள் காலடி எடுத்து வந்தான்.
வழியில் ஒருவரை சந்தித்தான்.

ஹீரோ விடம் பேசியவன், "உங்களிடம் இருக்கும் அபாரமான திறமைகளும்,  அதீத   சக்திகள் மட்டும் உங்களின் வெற்றிக்கு காரணம் ஆகி விடும் என்று நினைக்கிறீர்களா?" என்று கேட்டான்.


உயிரை பணயம் வைத்து ஆரம்பிக்கும் இந்த நேரத்தில், இப்படி ஒரு கேள்வி ஹீரோவின் தன்னம்பிக்கையை ஆட்டம் காண வைத்தது. பலசாலியின்
பலவீன மனம் முந்தி கொண்டு கேட்டது:
"என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்."


"எல்லாம் சரி. ஆனால் வாஸ்து படி, உங்கள் ஜட்டி தப்பான இடத்தில் இருக்கிறது. அதை pant உக்கு வெளியில் போட்டீர்கள் என்றால்............."


"நான் வெற்றி பெற வேண்டும். எதையும் செய்வேன். திறமைகள் சக்திகள் எல்லாம் அப்புறம்தான்."


செய்தான்..........
அவனின்  திறமைகளும் சக்தியும் man, superman ஆக செய்தது.


ஆனால், தன் அறிவுரைதான் அவரின் வெற்றியின் ரகசியம் என்று வாஸ்து படி உடையை மாற்ற சொன்னவர், வெளியில் சொல்ல ஆரம்பிக்க ..............


வாஸ்துக்கு பின் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கலாம். ஆனால்,
அபத்தங்கள்தான் அரங்கேறி கேலிக்குரியதாகின்றன.

        எங்கள் நெருங்கிய நண்பர் ஒருவர், யார் சொல்லியும் கேளாமல், வாஸ்து ஜோசியரை நம்பி, நன்கு நடைபெற்று கொண்டிருந்த தன் வியாபாரம் மேலும் விருத்தி ஆக தன் வீட்டை முழுதும் மாற்றி கட்டினார். குளியறை இருந்த இடத்தில் வரவேற்பு அறையும், வரவேற்பு அறை இருந்த இடத்தில் அடுக்களையும், படுக்கை அறை இருந்த இடத்தில் குளியல் அறையும், அடுக்களை இருந்த இடத்தில் மாடிப்படிகளும், முன் பக்கம் இருந்த வீட்டு வாசலை வேறு பக்கம் நோக்கியும் மாற்றி நிறைய செலவு செய்து கட்டிய மூன்று வருடங்களுக்குள், இன்று அந்த வீட்டை விட்டு விட்டு வாடகை வீட்டுக்கு வரும் நிலைக்கு வந்து விட்டார். வியாபாரம், படு மோசமான நிலையில் இருக்கிறது. 

            ஒரு வேளை, வாஸ்து படி நடக்கிறவர்களை விட வாஸ்து வைத்து பொழப்பு  நடத்துபவர்களுக்கு வெற்றி வாழ்க்கையோ என தோன்றியது .......

கருத்துகள் இல்லை: