தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/04/2010

தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..........


வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் – இனிப்பு
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் – இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.


தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
புண்ணியம் சேர்ப்பதில்


பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.


கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் – குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.


காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்


அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.


பண்டிகைகள் Funடிகைகளாக
அந்த டி.வி channelகளை அணைப்போம் -அன்பில்
குடும்பம் நண்ர்களை இணைப்போம்
அரவணைப்போம்.

நம் தமிழை போற்றுவோம் ...
தமிழனாய் இருப்போம் ...
எனது மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
கோவைராமநாதன் ... 

கருத்துகள் இல்லை: