மரணம்
மனு போட்டாலும் வராது !
மறுத்தாலும் விடாது !
மரணிக்கும் வரை
வாழ்வை வசமாக்கு!
மரணிக்கும் போது
வாழ்வு வரலாறு ஆகும்!
இவ்வாண்டின் மரணம்
வருமாண்டின் விடியலுக்கு
விட்டுச்செல்லும் வெளிச்சம் !
தனி மனித மரணம்
தன் சந்ததிக்கு
கற்றுத்தரும் பாடம்
ஒவ்வெரு நாளையும்
மரணமின்றி விடியலாக்கும்!
மரணத்தை கண்டு
மிரளாமல் மரணத்தின் கைகளில்
முத்தமிட்டுவாழ்வை வளமாக்குவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக