தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/13/2010

மறத்தமிழச்சி



தன்மானம் காக்க
அன்றொரு நாள்
முறத்தை தூக்கினாள்
மறத்தமிழச்சி

இன்றோ
தமிழ்மானம் காக்க
துப்பாக்கியை தூக்குகிறாள்
மறத்தமிழச்சி..


இளமை, கனவு,
குடும்பம்,நாடு,
பாசம்,சிரிப்பு,
சந்தோசம்,காதல்,
அழகு,உறக்கம்,
நிம்மதி,நாடு,
மக்கள்,


அனைத்தும்
இழந்திவள்..


பெற்ற விருது இந்த ஏகே 47...


பிறந்தோம் !வாழ்ந்தோம்!!
என்றில்லாமல்
வாழப்பிறந்தவள்...

கருத்துகள் இல்லை: