தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/23/2010

சோகம் தந்த காதல்



காதலித்து பார் இன்பம் வரும்.......அதையே
தொடர்ந்து பார் மிக பெரிய துன்பம் வரும்................


காதல் தோல்வியை பற்றி பல இடங்களில் பார்திருப்போம்,
கேட்டிருப்போம்.அது நம்மை பெரிதாக பாதிக்காது.ஆனால்
நம் வாழ்க்கையிலே அது நடந்தால் நம்மை வாட்டி வசக்கி
விடும் என்பது தான் உண்மை.


பெண்ணே,
நீ தான் என் உயிர் என்றேன்!
நீ தான் என் வாழ்கை என்றேன்!
நீ தான் என் சொந்தம் என்றேன்!


ஆனால் இறுதியில்........
என் தாய் தான் உயிர் என்றாய்!
என் தந்தை தான் என் வாழ்கை என்றாய்!
என் தனயன் தான் என் சொந்தம் என்றாய்!


உன் கரம் பிடிக்க நான் வழி என்னவென்றேன்............
ஆனால்,
உன்னை விட்டு பிரிய வழி சொன்னாய்.............


வீட்டார் எதிர்த்தாலும்,
உற்றார் வெறுத்தாலும்,
நான் உனக்கு தான்,என்று சொன்னது
வெறும் உதடு தானோ?


கண்ணால் பேசினாய்.............ரசித்தேன்..........
கடிதத்தில் பேசினாய்.............மகிழ்ந்தேன்............
பாசம் காட்டினாய்..............உணர்ந்தேன்............


ஆனால் இப்போது...................


வெறுப்பை ஏன் கொட்டுகிறாய்??????????
நான் அழ வேண்டும் என்றா???????????


உனக்காக எத்தனையோ செய்தேன்...........ஆனால்,


நான் அழுவதில் தான் உனக்கு இன்பம் என்றால்..........
அதையும் செய்கிறேன்,என் வாழ்நாள் முழுதும்.............


நான் உன்னை பிரிந்தாலும் உன் ஞாபகங்களுடனே வாழ்வேன்
இறுதி வரை..........

கருத்துகள் இல்லை: