தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/03/2010

என்னவள் மறைந்த(மறந்த) கதை......

அழகனே- உன்
செவ்வேல்விழிகளைப்
பார்த்ததும் நிலா ஒளிந்துகொண்டதே!
நீ
அமாவாசை இருட்டில் நின்றும்.....
அவ்வளவு அழகா அவை.........!?!

இனியவனே- உன்
இதழோரம்
வண்டுகள் வட்டமிடுகிறதே!
நீ
செவ்வந்தித் தோட்டத்தில் நின்றும்......
அவ்வளவு இனிமையா அவை.........!?!

பிரியமானவனே- உன்
உடலோடு
என் இதயம் சுற்றுகிறதே!
நீ
பூவுலகிலிருந்து விலகி நின்றும்......
அவ்வளவு அன்பானவையா அவை......!?!

1 கருத்து:

Unknown சொன்னது…

mikavum arumai rasithaen ,valthukal