அழகனே- உன்
செவ்வேல்விழிகளைப்
பார்த்ததும் நிலா ஒளிந்துகொண்டதே!
நீ
அமாவாசை இருட்டில் நின்றும்.....
அவ்வளவு அழகா அவை.........!?!
இனியவனே- உன்
இதழோரம்
வண்டுகள் வட்டமிடுகிறதே!
நீ
செவ்வந்தித் தோட்டத்தில் நின்றும்......
அவ்வளவு இனிமையா அவை.........!?!
பிரியமானவனே- உன்
உடலோடு
என் இதயம் சுற்றுகிறதே!
நீ
பூவுலகிலிருந்து விலகி நின்றும்......
அவ்வளவு அன்பானவையா அவை......!?!
1 கருத்து:
mikavum arumai rasithaen ,valthukal
கருத்துரையிடுக